Tuesday, February 5, 2008

ஆஃப்கான் - பெண்கள்

பெண்களுக்கெதிரான பயங்கரம் ஆஃப்கானில் பரவுகின்றன.
முத்துப்பேட்டை, அபூ அப்ஃரின்.
அமெரிக்காவின் அட்டூழியமான படையெடுப்பு ஆக்கிரமிப்பால், ஆப்கானிஸ்தானின் தொன்மையான கலாச்சாரமானது கொஞ்ச கொஞ்சமாக மாறி மேலை நாட்டு ஆதிக்க சக்திகளால் அடிமையாகிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது என்பதானது, அங்கு நடந்து வரும் நிகழ்ச்சிகளை நாம் ஊடகத்துறைகள் மூலமாக நாள்தோறும் அறிகிறோம்.
திரைப்படம் பாவச்செயல் என்று கூறிக்கொண்டு இருந்த ஆப்கானிஸ்தான் நிலைமையானது, இன்று கலாச்சாரத்திற்கும் அனாச்சாரத்திற்கு அடிமைப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சினிமாக்கவர்ச்சி நட்சத்திரங்களின் வருகை என்று தற்போது நிலைமையே தலை கீழாக மாறி விட்டது. உலக அழகிகள் உலா வருவதும் இங்கிருந்து தான். நடக்க தெரிந்தும் முள்கள் குத்தியதைப்போல் ஒரு பிரம்மையையும், பணக்கார தோரணையில் ஒரு கஞ்சத்தனமான ஆடையுடனும், கேமரா பார்வைகளுக்கு பல நுணுங்களை கற்றுக்கொடுக்கும் பாவைகளாகவும், மற்றும் சளைக்காமல் பத்திரிகைகளில் இடம் பெறும் நொறுக்கு தீனியாகவும் ஆப்கானிஸ்தான் அழகிகள் ஆகி விட்டார்கள்.
சமீபத்தில் அங்கு நடைபெற்ற அழகிப்போட்டி ஒன்றில், அழகி ஒருத்தி அந்நாட்டு தேசியக்கொடி வடிவில் வடிவமைக்கப்பட்ட ஆடையினை உடுத்தி வலம் வந்து, பார்வையாளர்களுக்கு விருந்து கொடுத்தாள். அத்துடன் இங்குள்ள சிறார்கள், படிப்பதற்கு பள்ளிக்கூடம் செல்கிறார்களோ இல்லையோ ஆனால் தெருக்களில் ஆபாச போஸ்டர்களை, சினிமா நடிகைகளில் கவர்ச்சி படங்களையும் விற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதனை பத்திரிகை வாயிலாக நாம் கண்டோம்.
மேலாதிக்க நாட்டின் இசையானது அந்நாட்டு பெண்களை மிகவும் கவர்ந்துக்கொண்டு இருக்கிறது என்பதும் திண்ணமே. ஆம்.. இசையினை இந்நாட்டில் வளர்க்க வேண்டும் என்பதிற்காக வேண்டி மேலாதிக்க சக்திகள், பல டாலர் தொகையினை செலவு செய்கின்றன இங்கு எனலாம். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் இளம் பெண்களை குறிவைத்தே இத்தகைய திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இளமையில் கற்றால் மறக்க மாட்டார்கள் என்பதால் இது போல் பல சூழ்ச்சி மாயைகள்
'ஒரு விஷயத்தை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு ப்பொருளைப் பற்றியும் நன்கு அறிகிறவனாக இருக்கிறான்.'அல் குர்ஆன் 33 : 54
உஸ்பெஸ்கிதான் எல்லை மாகாணத்தில், மஸர்-இ-ஷரிப் நகரத்தில் நாகசாந்த் இசைப்பயிற்சி பள்ளியில், ஆறு மாத காலத்திட்டத்துடன் தொடங்கப்பட்ட பயிற்சி கூடத்தில் 18 பெண்கள் அடங்கிய குழுவானது இசையினை கற்றுக்கொடுக்கிறார்கள் பிறருக்கு. இங்கு, பெண்கள் எப்படி பாடுவது, மற்றும் இசைக்கருவிகளான கீ போர்டு, தபாலா எப்படி வாசிப்பது என்பதினை நுணுக்கமாக கற்றுக்கொடுக்கிறார்கள். அத்துடன் பழைய மற்றும் புதுமையான இசைக்கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொடுக்கிறார்கள்.
இது போல் இசையாலும், பாட்டாலும் சிறு உள்ளங்களை கொள்ளை கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பல கோடி டாலர்களை ஆப்கானிஸ்தானில் தூவி விட்டு அவற்றில் குளிர் காய்கிறது ஆதிக்க சக்திகள். குறிப்பாக 2006 வருட வாக்கில், இந்நாட்டில் டாலர் 9,000 மதிப்பின் படி, ஆதிக்க சக்திகளின் கலை மற்றும் பண்பாடுகளை வளர்க்க வேண்டி செலவிட்டு இருந்தது அமெரிக்க சக்திகள்.
இது ஒரு சிறிய சாம்பிள் தான் இது போல் எத்தனையோ கோடிகளை கொடுத்தாவது பல வகைகளிலும் வளரும் நாடுகளையும் வளரும் இளைய சமுதாயத்தினை கெடுக்கவும் ஆதிக்க சக்திகள் முயற்சிகளை மேற் கொண்டு தான் இருக்கிறது.இங்கு படிக்கும் 14 வயதான ஜாக்ரா அம்ரி, கருத்தானது 'சிறு வயது முதல்கொண்டே எனக்கு இசையில் ஆர்வம் அதிகம், பெண்களும் இசைத்துறையில் சாதிக்கலாம், நானும் வருங்காலத்தில் ஒரு புகழ் பெற்ற இசைக்கலைஞானியாக வருவேன் என்று உறுதிப்பட கூறுகிறார். இங்கு படிக்கும் வயதில் குறைந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய அக்கா 25 வயதான மாசோமா மாஸாரியும் இங்கு தான் இசைப்பயில்கிறார். மேலும் அம்ரி கூறுகையில், இசையானது ஒரு கெட்ட வழிக்குக்கொண்டு செல்லும் என்று சில பெற்றோர்கள் நினைத்துக்கொண்டு தங்களின் பிள்ளைகளை இசை பயில விடுவதில்லை என்கிறார் இவர். ஆகையால் தான் ஆப்கானிஸ்தானில் முன்பு இசைக்கும், பாடலுக்கும், நடனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவரின் பேச்சானது மேலாதிக்க சக்திகளுக்கு உறுதுணை புரிவது போல் தான் உள்ளது.
தாலிபான் அரசானது போனப்பின் தான் நாங்கள் இருண்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளோம் என்று இங்குள்ள சில பெண்களும் புதுமை விரும்பிகளும் சொல்கிறார்கள். ஆனால் இத்தகைய வெளிச்சங்கள் எல்லாம் இருள் தான் என்பது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை..? மறுமை வாழ்விற்கு செல்லக்கூடிய அந்த கார் இருளினை மறந்து விட்டார்களோ என்று என்ன தோன்றுகிறது. தலிபான் ஆட்சி இருக்கும் போது இத்தகைய கலாச்சாரம் கட்டுபாட்டில் இருந்தது எனலாம்.
அன்று,
பெண்கள் வெளியில் செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லமாட்டார்கள் மற்றும் புர்க்காவால் முகங்களையும் மற்றும் உள்ள பிற உடல் பகுதியினையும் கவனமாக மூடி மறைத்துக்கொள்வார்கள். ஆனால் மேற்கத்தைய கலாச்சாரம் இங்கு பரவி விட்டதால் புதுமையான ஆடையினை உடுத்திக்கொண்டு எந்தவிதமான துணையும் இல்லாமல் இங்குள்ள பெண்கள் வலம் வருகிறார்கள் தன்னந்தனியாக.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பெண்களில் எடுத்துக்கொண்டால் பாதி பேர்கள் பக்கத்து நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனலாம். மற்ற நாடுகளான ரஷ்யா, ஈராக் மற்றும் ஈரான் நாட்டினை சார்ந்த பெண்கள் இங்கு அதிகம் உள்ளார்கள். அவர்கள் தாங்களும் சுதந்திர வாழ்வினை விரும்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு அனாச்சாரம் என்ற சகதியில் வீழ்ந்து விட்டார்கள்.
ஆள் பாதி.. ஆடை பாதி என்பது பழமொழியாக இருந்தது. கலாச்சாரங்கள் மற்றும் அனாச்சாரங்கள் அதிகரித்து விட்டமையால், ஆடை கால் பாதி.. ஆள் முக்கால் பாதி.. என்ற புது மொழியானது ஆப்கானிஸ்தான் நாட்டில் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளிலும் பரவி விட்டது ஆதிக்க சக்தியால்..!..?
'நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திர மானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும், அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவானக, மிகக்கிருபையுடையவனாக இருக்கின்றான்.'அல் குர்ஆன் 33 : 59
பெண்களை ஏக இறைவன் பலஹீனத்திற்கு மேல் பலஹீனமாக தான் படைத்து உள்ளான். ஆனால் அந்த பலஹீனத்தை தம்முடைய பலமாக எண்ணிக்கொண்டு பல ஆதிக்க சக்திகள் பெண்களை எல்லாத்துறைகளிலும் புகுத்தி மகிழ்ச்சி அடைகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டு இஸ்லாமிய பெண்களை வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஊடகத்துறையில் பணிபுரியக்கூடியவர்களாகவும் ஆக்கி உள்ளது. இவற்றில் பணி புரியும் இப்பெண்கள், அவர்களுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு உண்மையான செய்தியினை மறைத்து விடுகிறார்கள்.
இவர்கள் செய்யும் இந்த செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாத அந்நாட்டின் மார்க்க பற்றும் மற்றும் மதப்பற்றும் உள்ளவர்கள் அவர்களை, அவர்கள் பணி புரியும் இடத்திற்கு சென்று மிரட்டல் விடுகிறார்கள்.
அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் 'ஃபெமினென்சா' என்ற பெண்கள் இயக்கத்தின் துணை நிறுவனர் ஜோனா ஃபிரான்சிஸ் என்ற கிறிஸ்துவ சகோதரி ஒருவர் சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தினை, பிரபல இஸ்லாமிய மாத இதழ் (பார்க்க – விடியல் வெள்ளி ஜீன் 2007 இதழ் பக்கம் 8 மற்றும் 9) வெளியிட்டு இருந்தது.
'முஸ்லிம் பெண்களுக்கு ஒரு கிறிஸ்துவ சகோதரியின் எச்சரிக்கை' என்ற தலைப்பிட்டு அந்த கட்டுரை இருந்தது. அதனின் சாராம்சம் இதோ.
.அமெரிக்கர்களின் திரைப்படமும், இசையும் நடனமும் பாடலும் தீமைகளை தூண்டக்கூடிய வகையில் உள்ளது. முஸ்லிம் பெண்களை மனோ இச்சைகளுக்கு ஆட்படுத்த முயற்சிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இது போன்ற திரைப்படங்களில் நாங்கள் (அமெரிக்க பெண்கள்) விபச்சாரிகளைப் போல் உடை அணிவதையும் குடும்பத்தை விட்டு விலகி சந்தோஷமும் திருப்தியும் அடைவதாக சித்தரிக்கின்றனர். ஹாலிவுட் திரைப்படங்களில் நீங்கள் பார்க்கும் அனைத்தும் பொய் சித்தாந்தங்களும் நடைமுறைக்கு புறம்பான கலாச்சாரங்களும் தான். மேற்கத்திய ஆடைகள், ஒரு பெண்ணின் அழகு என்பதை அவளின் கவர்ச்சி மட்டும் தான் என்று உங்களை நம்பவைக்கின்றன.
ஆனால் இஸ்லாமிய பெண்களுடைய கலாச்சார ஆடைகளும் அவர்களுடைய பர்தாக்களும் மேற்கத்திய ஆடைகளைவிட அழகானவை. ஏனெனில், முஸ்லிம் பெண்களுடைய பாரம்பரிய ஆடைகள் அவர்களின் நம்பிக்கையையும் சுய மரியாதையையும் பாதுகாப்பதாக உள்ளது. சகோதரிகளே.. ஏமாந்து விடாதீர்கள்.. உங்களை நாசமாக்க அவர்களுக்கு (மேற்கத்தியர்களுக்கு) வாய்ப்பை கொடுக்காதீர்கள். உங்களின் கலாச்சாரத்ததை விடுத்து பிறவற்றில் மோகம் கொள்ளாதீர்கள் என்று அந்த சகோதரி, அந்த கடிதத்தில் மிகவும் உருக்கமாக எழுதி இருக்கிறார்.
இந்த எச்சரிக்கையானது, புதுமைகளை கண்டு புது யுகம் படைக்க இருக்கும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய சகோதரிகளுக்கு மட்டுமல்ல.. அனாச்சார சீரழிவால் நாள்தோறும் புதைந்துக்கொண்டு இருக்கும் பல நாட்டில் உள்ள நம்முடைய சகோதரிகள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக தான் அமையும் என்ற நம்பிக்கையுடன்..! வாழ்க்கை முன்னேற்றமும் மற்றும் ஆடம்பர வசதியும் தேவை தான் ஆனால் அதுவே வரம்பு மீறி போய்க்கொண்டு இருந்தால்..
வருங்காலங்கள் என்ன செய்ய போகிறது..? 1992 ம் வருடத்தில், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியான தாஸிகிஸ்தான் (Tajiskistan) பகுதியில் துவங்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு போரில் புதைக்கப்பட்ட பல வெடிப்பொருட்கள் தற்போது வெடித்து சிதறுகின்றன. சமீபத்தில் அந்த பகுதியினை சார்ந்த 'சலீம் ஷாய்முதிநாவ் (Salim Saimuddinov) என்ற சிறுவன் தன்னுடைய அண்ணனுடன் மலைப்பிரதேசத்திற்கு சென்று அடுப்பு எரிக்க விறகு எடுக்க சென்று இருக்கின்றான். (அங்கு துவங்கப்பட்ட போரால் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டு உள்ளது என்பது குறிப்படத்தக்கது). அங்கு அவனது காலடியில் பந்து போன்ற ஒன்று தட்டுப்பட்டு உள்ளது. அதனை அவன் விளையாட்டுக்காக உதைத்து இருக்கின்றான். தீடிரென்று வெடித்து அந்த சிறுவனின் கால் மற்றும் முகங்கள் பாதிக்கப்பட்டது. அதனை பற்றி அங்குள்ளவர்கள் குறிப்பிடுகையில் இந்த வகையான வெடிப்பொருட்கள் கிளாஸ்டர் பாம் (Cluster Bombs – ShOAB-0.5) என்று அழைக்கப்படுகிறது. இது பயங்கரமான சக்தி வாய்ந்தது என்றும் கூறுகிறார்கள். இது போல் இன்னும் பல வகையான வெடிப்பொருள்கள் இங்கு உள்ள மலைப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டு உள்ளன என்றும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.
அத்துடன் இத்தகைய வெடிப்பொருட்களானது, செசன்யா உகாண்டா கியூபா, சிரியா, உக்ரைன் போன்ற நாடுகளில் பயன் படுத்தப்படுகிறது. வருங்காலங்களில் இங்குள்ள சிறார்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்க்கொள்ள போகிறார்களோ..!
தற்போது அமெரிக்காவால் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கும் ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, இன்னும் பல நாடுகளில் உள்ள சின்னஞ்சிறு மலர்கள் பிறக்கும் போதே பல இன்னல்களுக்கு ஆளாகி தான் பிறக்கிறார்கள். மற்றும் அவர்கள் அனைவரும் ஏதொவொரு வகையில் ஊனமாக தான் பிறக்க செய்கிறார்கள். இவற்றிற்கு எல்லாம் காரணம் அந்த அந்த நாடுகளில் பயன்படுத்த படும் இது போல் உள்ள இராசயன வெடிப்பொருட்கள் தான் என்று தைரியமாக சொல்லலாம்.
தொட்டிலில் உறங்கும் குழந்தைகளின் நினைவுகள் இரத்தச்சுவடுகளோ..!..? தாமரை மலர் போன்ற கைகளை காணும் போது இரத்தக்கறை தான் மிஞ்சம் என்ற உணர்வுடன் பல(ர்) பிஞ்சுகள்.. பல நாடுகளில்..குழந்தையின் அழுகுரல்.. பசியா..!.. தூக்கமா..? பிறருக்கு தெரியாத பாஷைகள். தாய்க்கு மட்டும் தெரியும்.. ஆனால் கண் விழிக்கும் போது அந்த தாயினை பார்க்க முடிய வில்லை. பாசம் அறிந்த தாயினை துக்கமாக்கிய துரோகிகளால் கரைந்த கண்ணீர்த்துளிகள் ஏராளம்.
துப்பாக்கி துணையுடன் மொட்டுகளை சிறு பருவத்தில் பிய்த்தெறிய கல் நெஞ்சங்கொண்ட கயவர்களுக்கு என்ன துணிச்சல்..சிறு மலர்களை சிதைக்கும் போது மனித நேயம் மாய்ந்து தான் போய் விட்டது என்ற ஆச்சரியங்கள் ஒவ்வொரு நாளும்..?..!
ஏக இறைவன் இந்த உலகத்தினை மிகவும் அழகாக படைத்து இருக்கிறான். அதில் எத்தனையோ இயற்கையான வித்தைகள் இருக்கின்றன். ஆனால் அந்த வித்தைகளை அழிக்கக்கூடிய அளவில் தற்போது ஆதிக்கசக்திகளானது ஆப்கானிஸ்தான் நாட்டில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் மற்றும் இடங்களில் குண்டுகளை பொழிந்து அங்கு மாசுக்களை உண்டாக்கி வருகிறார்கள். இதனால் பல நாடுகளில் மாசுக்கள் அதிகமாக படிந்து வருகின்றன என்றால் மிகையாகாது. அந்தந்த நாடுகளில் உள்ள மாசுகட்டுப்பாடு அமைப்பானது பல போராட்டங்களையும் மற்றும் விழிப்புணர்வுகளையும் மக்களின் மத்தியில் செய்து வருகிறது.
வானங்களிலுள்ளவையும், இன்னும் பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். இன்னும், உங்களுடைய மனங்களிலுள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அவற்றை நீங்கள் மறைத்துக்கொண்டாலும் அதைப்பற்றி அல்லாஹ் உங்களை (விசாரணை செய்து) கணக்கு கேட்பான். ஆகவே, அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பு அளிப்பான். அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். அல்குர்ஆன் 2: 284

Thursday, November 22, 2007

வட்டி - வங்கி -முஸ்லிம்கள் (1)

வட்டி - வங்கி -முஸ்லிம்கள் பகுதி (1)
உலகெங்கும் வங்கிகள் வியாபித்துள்ள நிலையில் வங்கி முதலீடு அதிலிருந்து வரும் வருவாய் போன்றவற்றில் அகில உலக முஸ்லிம்களுக்கும் சந்தேகங்கள் நீடித்தவண்ணமுள்ளன. வெளிநாடுகளில் இது பற்றிய ஆய்வுகளும், விளக்கங்களும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாகவே இந்தக்கட்டுரை உங்கள் பார்வைக்கு.. இந்தக்கட்டுரையின் கருத்துக்களை இஸ்லாமிய (இறுதி) தீர்வாக நாம் வைக்கவில்லை. பலகோணங்களில் படித்து கேட்டு விளங்கி ஆய்வு செய்ததையே முதல் முறையாக உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம். முறையான விளக்கங்களும் ஆதாரங்களும் கிடைக்கும் போது இந்த கட்டுரையின் கருத்துக்களில் மாற்றங்கள் வரலாம்.

இதுபற்றிய ஒரு விரிவான ஆய்வுகளத்தில் உங்களையும் கலந்துக் கொள்ளுமாறு அழைக்கின்றோம். ஆதவான, எதிர்மறையான, சந்தேகமான அனைத்துக் கருத்துக்களையும் தயக்கமின்றி, அலட்சியமின்றி எழுதுங்கள்.
குர்ஆன் சுன்னா வழிகாட்டும் அந்த பொருளாதார அமைப்பு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
..................................
  • அ) வட்டி என்றால் என்ன..?
  • ஆ) நம் விருப்பத்துடன் வட்டி நம் பொருளாதாரத்துடன் இணைய வேண்டுமானால் அதற்குரிய நிபந்தனைகள் என்னென்ன..?
  • இ) இன்றைக்கு உலகம் எதை வட்டி என்று சொல்கிறதோ இதைத்தான் இஸ்லாமும் வட்டி என்று சொல்கிறதா.. அல்லது இஸ்லாம் வட்டி என்று சொல்வது இன்னும் அழுத்தம் வாய்ந்தவையா..?

இவற்றிற்கான பதிலை முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

முதலில் குர் ஆன் வட்டி என்று எதை குறிப்பிடுகிறது என்பதை விளங்குவோம்.

வட்டியின் வகைகள்.

ஒரு முறை லாபம் கிடைக்கும் வகை.
வியாபாரம் வட்டியைப் போன்றதே... என்ற வாதத்தை முன் வைத்து அன்றைக்கு பலர் தங்கள் பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டிருந்தார்கள். இறைவன் இதை மறுத்து 'அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடை செய்துவிட்டான்' என்கிறான். 2:275
வட்டியும் வியாபாரமும் ஒன்று என்று கூறியவர்கள் 'இரண்டிலிருந்தும் லாபம் கிடைப்பதயே கருத்தில் கொண்டிருந்தார்கள்' இறைவன் இதை மறுக்கிறான். என்னக் காரணம்?
வியாபரம் என்பது பணம் பொருளாக மாறும் அடிப்படையையும் - இயல்பையும் கொண்டதாகும். வட்டி என்பது பணம் பணமாகவே மாறும் இயல்பைக் கொண்டதாகும். பணம் பொருளாக மாறும் போது அது உற்பத்தி பெருக்கத்தையும் தொழில் அபிவிருத்தியையும் ஏற்படுத்தும். மக்களின் வாழ்வாதார தேவைகள் பூர்த்தியாகும். பணம் பணமாக மாறும் போது இதில் எதுவுமே சாத்தியமில்லை என்பது மட்டுமல்லாமல் பணம் முடங்கி கிடக்கும் சூழ் நிலையையும் உருவாக்கி விடுகிறது.
பொதுவாக செல்வம் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதையோ அது ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டும் சுற்றிக் கொண்டிருப்பதையோ இஸ்லாம் விரும்பவில்லை.
உங்களில் செல்வந்தர்களிடையே மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்கக்கூடாது. (அல் குர் ஆன் 59:7)
பணம் பொருளாக மாறாமல் பணமாக மாறும்போது அவை பணம் படைத்தவர்களிடமே பதுங்கி கிடப்பதை இயல்பாக கொண்டுவிடும். மார்வாடி வகைறாக்கள் இதற்கு உதாரணம். தொழில் அல்லது வியாபாரம் செய்வதற்கு ஓரளவாவது பணம் தேவைப்படும். வட்டிக்கு இந்த முதலீடுகள் தேவையில்லை. 100 ரூபாயை வைத்து வியாபாரம் செய்ய முடியாத ஒருவனால் 100 ரூபாயை வட்டிக்கு விட்டு 105 ரூபாய் சம்பாதித்துவிட முடியும்.
இந்த வகையில் சில்லரையாகவும் பெருமளவு பணம் முடக்கப்படுவதால் பண வீக்கம் அதிகமாகி எத்துனையோ கெடுதிகள் முளைத்து நிற்கின்றன. பணம் கொடுத்து கூடுதல் பணம் பெருவதே இங்கு வட்டியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை விளங்கலாம். வியாபாரத்தில் ஒரு பொருளுக்கு ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்று ஒரு தொகையை கொடுத்து விட்டு அதை திரும்ப பெறும்போது கூடுதலாக ஒருமுறை வட்டிப் பெறும் முறை 'வட்டி முறைகளில்' ஒன்றாக இருந்தது. அது இந்த வசனத்தின் வழியாக இறைவன் தடுத்துவிட்டான்.
தொடர் வட்டி.
இறை நம்பிக்கையாளர்களே..! பல மடங்காக பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். வெற்றிப் பெறுங்கள். (அல் குர் ஆன் 3:130)

(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்ல. (அல் குர்ஆன் 30:39).
இவை 'தொடர் வட்டி'க்கு எதிராக இறங்கிய வசனமாகும்.

'பல மடங்காக பெருகும் நிலையில்' என்பது. சேமிப்பு - முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை குறிப்பதாகும். தொடர் லாபம் என்பது வட்டிக்கு மட்டுமே உரிய வஞ்சனைத்தன்மையாகும். ஒரு பொருளுக்கு விற்பனையின் போது ஒரு முறை லாபம் ஈட்டுவது போன்றத் தன்மை கொடும் வட்டியான தொடர் வட்டிக்கு இல்லை. தொடர் வட்டியின் மூலதனம் ஒரு நாடு அல்லது அந்த நாட்டு மக்களின் இயலாமையும் பலவீனமுமே காரணமாக அமைந்து விடுகின்றன. நான் உனக்கு ரூ1000 கொடுப்பேன் அதை திருப்பி அடைக்கும் வரை மாதாமாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது ஒரு குறிப்பிட்ட முதலீட்டின் மீதான தொடர் லாபத்தை ஈட்டித்தரும் வட்டியாகும். இந்த வட்டி முறை உலகலாவிய வலையைப் பின்னி பல நாடுகளை செல்லாக் காசாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த வட்டி முறை மிகப்பெரும் பொருளாதார அழிவை ஏற்படுத்த வல்லது என்பதால் இஸ்லாம் இதற்கு எதிராக முன்னணியில் நின்று போர் பிரகடனம் செய்கிறது. இத்தகைய வட்டி முறைகளை எந்த சமாதான வார்த்தைகளாலும் நியாயப் படுத்தவே முடியாது என்பதுதான் நமது நிலைப்பாடு.
அடுத்து,
வங்கி - வங்கியில் செய்யும் முதலீடு அல்லது சேமிப்பு- அவற்றிலிருந்து கிடைக்கும் (வருமானம்) வட்டி இவற்றை மேற்குறிப்பிட்டுள்ள வட்டி முறையோடு ஒப்பிடுவதும் - ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று சொல்லுவதும் எந்த அளவிற்கு நியாயமானது என்பதை பார்ப்போம்.
வங்கியும் - வட்டியும்.
வங்கி என்பது சிறு தொகை முதல் பெரும் தொகை வரை மக்கள் முதலீடு செய்யும் ஒரு நிருவனமாகும். இந்த நிருவனம் தேசிய அளவில் ஒரு வலையைப் பிண்ணிக் கொண்டு தன்னுடைய பணியை துவங்குகிறது. இதன் பணி முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்று மேட்டுக் கு,டி நடுத்தர வர்கம், வறுமைக்கோடு என்று வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் அவர்களின் தேவைக்கு பணம் கொடுத்து மேலதிகமாக பணம் பெற்று முதலீட்டாளர்களையும் தன்னையும் வளப்படுத்திக் கொள்கிறது.
பணம் கொடுத்து கூடுதலாக பணம் பெறுவது வட்டிதான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் வங்கிகள் இந்த வேலையை மட்டும் தான் செய்கின்றனவா... என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
விவசாயம் - தொழில் - வீட்டுவசதி போன்றத் தேவைகளுக்காக மட்டும் ஒரு வங்கி இயங்கினால் அந்த வங்கியில் கையிருப்பு என்பது மிக குறைந்த அளவைப் பெற்றுவிடும் வாய்ப்புள்ளது.
உதாரணமாக, அன்னிய செலவாணி அறவே இல்லாத - உள் நாட்டு அளவில் மட்டுமே இயங்கும் ஒரு வங்கியை எடுத்துக் கொல்வோம். இதில் அன்னிய செலவாணி இல்லாததால் வட்டி சதவிகிதம் குறையும் என்பதால் முதலீட்டாளர்கள் குறைவாகவே இருப்பார்கள். இந்த வங்கி முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டையும் கடனாக கொடுக்கும் பட்சத்தில் வரும் வட்டி மட்டுமே கையிருப்பாக வைக்கும் சூழல் அந்த வங்கிக்கு உருவாகி வங்கி பெரும் பிண்ணடைவை அடைந்துவிடும். அதனால் கடனுதவி என்பதோடு மட்டும் நின்று விடாமல் நல்ல லாபம் ஈட்டும் நிலையில் உள்ள தொழில் மற்றும் வியாபாரத்திலும் வங்கிகள் முதலீடு செய்து வருவாயை பெருக்கிக் கொள்ளவே செய்யும்.
அன்னிய செலவானியைப் பெற்றிருக்கும் வங்கிகளும் தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரும் தொகையை முடக்கி லாபம் பெறவே செய்யும். வெறும் கடனுக்கு வட்டி என்ற நிலை மட்டும் வங்கிகளில் இருந்தால் அதன் கையிருப்பு குறையும் என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.
ஒரு வங்கி விவசாயம் - தொழில் - வீட்டு வசதி போன்றவற்றிற்கு மட்டும் கடன் கொடுத்து வட்டி வசூலிக்கிறது என்று வைத்துக் கொள்வோம் இப்போது கடனுக்காக அது ஒதுக்கும் தொகையின் அளவு என்ன..?
விவசாயத்திற்கென்று விவசாயிகள் அய்ம்பது லட்சம் பேர் (இவை மிக குறைந்த அளவே) வங்கியிலிருந்து நபர் ஒருவர் தலா ஒரு லட்சம் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது வங்கி அதற்காக ஒதுக்க வேண்டிய தொகை மொத்தம் அய்னூரு ஆயிரம் கோடிகளாகும்.
தொழில் - வீட்டு வசதிக் கடன் ஆகியவற்றை கணக்கிடும் போது இவை இன்னும் பல மடங்காக உயரும். கடனுக்கு உத்திரவாதமாக வங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும் ஒழுங்காக வட்டிக் கட்டப்படாமல் - திருப்பி அடைக்க வழியில்லாமல் போய் தள்ளுபடி செய்ய வேண்டிய கடன் பல ஆயிரம் கோடிகளை தொடும். (தேவைப்பட்டால் இதுபற்றி மேலும் விளக்கலாம்)
இந் நிலையில் பணம் கொடுத்து பணம் பெருவது என்ற அந்த ஒன்றை மட்டுமே வங்கி மூல்தனமாகக் கொண்டிருந்தால் அதன் கையிருப்பு மற்றும் வருவாயில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும். இதை சரிகட்டுவதற்காக வங்கிகள் பெரும் - பெரும் தொழில் நிருவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றன. பங்க சந்தை, பத்திரங்கள், உட்பட பணம் பண்ணும் வழிகளை வங்கிகள் தெளிவாகவே கண்டு வைத்துள்ளன. வாடிக்கையாளர்களின் பணம் பல நிலைகளில் முதலீடு செய்யப்படுகின்றன. அவற்றிலிருந்து வரும் லாபங்கள் கடனுக்கான வட்டியுடன் கலந்தே வாடிக்கையாளர்களை அடைகின்றன.
லாபமும் வட்டியும் கலந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை பேணுதல் அடிப்படையில் தவிர்த்துக் கொள்ளலாம் என்று கூறலாமே தவிர அவற்றை 'ஹராம்' என்று கூறுவது முறையல்ல என்றே கருதுகிறாம்..
'தவிர்த்துக் கொள்ளுதல்' என்பதின் பொருள் என்னவென்பதை இப்போது பார்ப்போம்.
இஸ்லாம் 'தவிர்த்துக் கொள்ளுதல்' என்பதை இரண்டு அர்த்தங்களில் முன்வைக்கிறது.
1) விலக்கப்பட்டவை என்று தெரிந்து அதை தவிர்த்துக் கொள்ளுவது.
2) ஒன்றின் மீது சந்தேகம் வரும் போது அதை தவிர்த்து விடுவது.
நம் தேவைக்காக வங்கியில் சேமிக்கப்படும் பணத்திற்கு மேலதிகமாக கிடைக்கும் தொகை 'வட்டியோ...' என்று சந்தேகம் வரும் போது அத்தகைய பணத்தை தன் சொந்த தேவைக்கு பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே 'தவிர்த்துக் கொள்ளுதல்' என்ற அர்த்தத்தில் இங்கு குறிப்பிடுகின்றோம்.
வங்கிகள் எத்தகைய தொழிலிலும் பணத்தை முடக்காமல் கடன் மட்டுமே கொடுத்து வட்டிப் பெறுகிறது என்று தெளிவாக நிருபிக்கப் படாதவரை அது மேலதிகமாக கொடுக்கும் தொகையின் மீது 'சந்தேகம்'மட்டுமே நிலைத்திருக்கும்.
'ஹலாலும் தெளிவானது - ஹராமும் தெளிவானது இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு. மனிதர்களில் அனேகமானோர் அதை அறியமாட்டார்கள். எவர் சந்தேகமானதிலிருந்து விலகிக் கொள்கிறாரோ அவர் தன்னையும் தன் மார்க்கத்தையும் பாதுகாதுக் கொண்டவராவார்' என்பது நபி மொழி. (புகாரி)
இந்த நபிமொழி முன் வைக்கும் கருத்து என்ன என்பதை நாம் ஆழமாக சிந்தித்து விளங்க வேண்டும்.
இஸ்லாத்தில் ஹராம், ஹலால் என்ற இரு நிலைகள் மட்டுமே உள்ளன அதை கடந்து எதுவுமில்லை என்று யாராவது புரிந்துக் கொண்டால் அவர்களுக்கு மறுப்பு இந்த செய்தியில் உள்ளது.
நபி(ஸல்) தூத்துவ பணியை செய்துக் கொண்டிருந்த காலத்தில் அன்றைய காலத்திற்குத் தேவையான அனைத்து சட்டங்களும் 'தெளிவாக' அறிவிக்கப்பட்டன. ஹராமோ - ஹலாலோ இரண்டையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அன்றைய மக்கள் விளங்கினார்கள். எது ஒன்றையும் சந்தேகம் கொள்ளும் நிலையில் அந்த மக்கள் இல்லை என்றால் 'இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தேகமானவையும் உண்டு' என்று நபி(ஸல்) எதைக் குறிப்பிட்டார்கள்? அன்றைக்கு அந்த நிலை இல்லை என்றாலும் பிந்னையக் காலத்தில் இத்தகைய நிலைகள் உருவாகலாம் என்பதையே நபி(ஸல்) முன் குறிப்பாக்கியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
அன்றைக்கு அந்த மக்களிடம் இருந்த பொருளாதார திட்டம், வழக்கம், பொருள்மாற்று வழிமுறைகள் போன்ற அனைத்தும் அடுத்து வந்த சில நூறு ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை கண்டு விட்டது. இருபதாம் நூற்றாண்டில் அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலிருந்த பொருளாதார பார்வை, மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் தலைகீழ் மாற்றமாகி போயின. ஊர் சந்தை வியாபாரம் என்ற நிலை உலக சந்தையானது. பொருளாதாரம் அகலமாக கண்களை விரித்து முழு உலகையும் பார்த்தது. விளைவு வங்கி உட்பட அனேக பொருளாதார நிருவனங்கள் உலகில் முளைத்து தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு வாழ்பவர்கள் புதிய பொருளாதார சிக்கல்களை சந்திக்கின்றார்கள். வைப்பதிலும், பெருவதிலும், கொடுப்பதிலும் புதிய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். தான் ஒரு முஸ்லிமாக இருப்பதால் இந்த பொருளாதார வழிகளை எப்படி கையாள்வது என்பதில் அவர்களுக்கு சந்தேகம் வருகின்றது.
ஹலாலென்றோ ஹராமென்றோ தீர்மானித்து விட முடியாத இக்கட்டான நிலைகளில் கிடந்து மனம் தடுமாறுகின்றது. இத்தகையவர்களுக்கு ஆருதலளித்து வழிகாட்டுகிறது இந்த நபிமொழி. குறிப்பாக வங்கியில் நாம் சேமிக்கும் பணத்திற்கு மேலதிகமாக கொடுக்கப்படும் பணம் பற்றிய சந்கேத்திற்கு வழி காட்டுகிறது.
வங்கியின் கணக்கு நிர்பந்தமா... அடுத்துப் பார்ப்போம்

Friday, October 26, 2007

திரைமறைவு ஆளுமையில் உலகம்

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து அரை நூறாண்டு நிறைவுப் பெற்று விட்ட நிலையிலும் மக்கள் முன்னேற்றத்தில் ஒரு மகா தேக்கநிலை நிலைத்து நிற்பதை உணராத அறிவாளிகள் யாரும் இருக்க முடியாது. ஓரு பரந்த முன்னேற்றம் இல்லை என்றாலும் மக்கள் பதட்டமில்லாத ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்களா.. என்று பார்க்கும் போது உலக நாடுகளில் குறிப்பாக வல்லரசுகளிலும் அதன் ஆணைக்கு கட்டுப்பட்டு நடக்கும் நாடுகளிலும் உள்ள மிக மிக சொற்பமான மக்களே நிம்மதியான சுகபோக வாழ்வை சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலக மக்கள் தொகையில் இவர்கள் ஐந்து சதவிகிதத்தைக் கூட தாண்ட மாட்டார்கள் என்பது தான் உண்மை.
இதற்குரிய காரணம் என்ன? என்பதை ஆய்வுக்குட்படுத்தினால் உடனடியான பதில் மக்கள் தொகை பெருக்கம் என்பதுதான். அதிலும் இந்த பதிலை வல்லரசுகளே தொடர்ந்து முன்மொழிகின்றன.எதையும் சந்திக்கவும் சாதிக்கவும் சக்திப் பெற்ற வல்லரசுகள் இந்த பதிலை சொல்லும் போது இயற்கையிலேயே ஒரு சந்தேகம் வலுக்க துவங்கி விடுகிறது. அவசரமாக இந்த பதில் உதிப்பதற்கு காரணம் என்ன? வேறு எதையோ மறைக்க இந்த பதில் அவர்களுக்கு ஆயுதமாகவும் ஆயத்தமாகவும் ஆகிவிடுகின்றன.
மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப இயற்கை வளங்களின் வளர்ச்சியும் குறைவின்றி செழுமையாக விளையும்போது மக்கள் வளர்ச்சியின் தேக்க நிலைக்கு மக்கள் தொகை வளர்ச்சியே காரணம் என்ற பதில் ஒரு போதும் சரியாக இருக்காது.
இதற்குரிய காரணத்தை கண்டுபிடிக்க வேண்டுமானால் இரண்டாம் உலகப் போருக்கு பின் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகளை நாம் தெரிந்தாக வேண்டும். அப்படி தெரியும் போது ஒரு மர்ம சக்தியின் பிடிக்குள் இந்த உலகம் சிக்கி இருப்பதே மக்கள் வளர்ச்சியின் தேக்க நிலை உட்பட எல்லா கெடுதிகளுக்கும் காரணம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
1954ம் ஆண்டு உலகில் ஒரு அமைப்பு உருவாகிறது. - பில்டர்பேர்ஜ் - என்ற பெயர் கொண்ட இவ்வமைப்பை ஸ்வீடன் நாட்டை சார்ந்த பெரும் தொழிலதிபரும் அரசியல் செல்வாக்கு பெற்றவருமான ஜோசப் ரெடிங்கர் என்பவர் நிறுவுகிறார். சோர்போன் பல்கலை கழகத்தில் படித்து பட்டம் பெற்ற இவர், ஐரோப்பாவின் வல்லமையை பலப்படுத்தும் ஒரு கனவை உருவாக்கிக் கொண்டார். ஆரம்ப நாட்களில் இவரின் ஒரு சில திட்டங்கள் எடுபடவில்லை என்றாலும் தனது கடின முயற்சிக்குப் பிறகு 1920களில் மெக்ஸிகன் நாடுகளுடனான ஒரு வர்த்தக தொடர்பை ஏற்படுத்துவதில் வெற்றிப் பெற்றார். முதலாம், இரண்டாம் போர்களின் விளைவுகளை நிதானமாக உற்று நோக்கி 1950களில் மேற்குலகின் அரசியல் மற்றும் ராணுவ முக்கியப் புள்ளிகளுடன் உறவு வைத்துக் கொள்ளத்துவங்கி அதை வலுபடுத்திக் கொண்டார்.

உலக மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து அதில் ஆதிக்கம் செலுத்துவது என்பது அமெரிக்காவின் ஒத்துழைப்பின்றி நடக்காது என்பதை சரியாக யூகித்த இவர் ஐரோப்பிய அரசியலிலும் பெட்ரோல் உற்பத்தித் துறையிலும் செல்வாக்குப் பெற்றிருந்த ஹோலாந்து இளவரசர் பெரன்ஹார்ட் டின் உதவியை நாடிப் பெற்றார்.
இப்படியாக தன் செல்வாக்கை பெருக்கிக் கொண்ட இவரால் முறைப்படுத்தப்பட்ட, பில்டர் பேர்ஜ் என்ற ரகசிய அமைப்பின் முதலாவது கூட்டம் 1954 மே மாதத்தில் உஸ்டர்பீக் என்ற நகரத்தில் ஒரு ஹோட்டலில் கூட்டப்பட்டது. முதல் கூட்டத்தின் நினைவாகவும், அமைப்புப் பற்றி வெளிப்படையாக தெரியாமல் இருப்பதற்காகவும் எந்த ஹோட்டலில் கூட்டம் கூட்டப்பட்டதோ அந்த ஹோட்டலின் பெயரையே அமைப்பின் பெயராக்க முடிவு செய்யப்பட்டது. அந்த ஹோட்டலின் பெயர்தான் பில்டர் பேர்ஜ்.
இவ்வமைப்பிற்கு கனவு கண்ட பெரன் ஹார்ட் தலைமையிலேயே இதன் கூட்டங்கள் 22 வருடங்கள் நடந்துள்ளன. இக்கூட்டத்திற்காக இவர்கள் வருடந்தோரும் ஐரோப்பிய நகரங்களையே தேர்ந்தெடுத்தனர். கலந்துக் கொள்ளும் உறுப்பினர் எண்ணிக்கையை 120ஐ தாண்டாமல் பார்த்துக் கொள்வார்கள். இக்கூட்டங்கள் பற்றிய எந்தவித தகவலையோ ஆவனங்களையோ இவர்கள் பதிவு செய்துக் கொள்ள மாட்டார்கள். பிறரால் பதிவு செய்யவும் முடியாது. தப்பித் தவறி எப்படியாவது செய்தி வெளியில் போய் விட்டால் எத்தகைய விலை கொடுத்தும் அந்த செய்தி வெளியில் வருவதை தடுத்து விடுவார்கள்.
இக் கூட்டத்தில் கலந்துக் கொள்பவர்களில் 85 பேர் ஐரோப்பியர்களும் மீதி 35 வட அமேரிக்கர்களும் ஆவர். 80க்கும் மேற்பட்ட அரசியல் வாதிகளும் மீதி இருப்போர் பொருளாதார, கல்வி, வர்த்தக புள்ளிகளும் இடம் பெறுவர்.
அமைதியான ஒதுங்குப்புறமான இடமே கூட்டம் நடத்த தேர்வு செய்யப்படும். இக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள வரும் எந்த பிரமுகரும் கூட்டம் நடக்கும் மூன்று நாட்கள் வரை தங்கும் இடத்தை விட்டு வெளியில் செல்ல முடியாது. கூட்டம் நடக்கும் இடத்திற்கான பாதுகாப்பை அமெரிக்க உளவு பிரிவும் ஐரோப்பிய நாடுகளின் உளவுப் பிரிவும் பொறுப்பெடுத்துக் கொள்ளும்.
1959 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளுக்கான இவ்வமைப்பின் கூட்டம் துருக்கியில் (முஸ்லிம் நாடு) நடந்தது. துருக்கியின் அரசியல் பொருளாதார கல்வித்துறை முக்கியஸ்தர்கள் இதில் கலந்துக் கொண்டனர். அந்நாட்டை சார்ந்த ஸலாஹூத்தீன் பயாஸீத் இவ்வமைப்பின் நிரந்தர உறுப்பினராவார்.
இவ்வமைப்புப் பற்றிய செய்திகள் வெளிவர துவங்கியவுடன் உலக அமைதிக்கு பாடுபடுவதுதான் எங்கள் லட்சியம் என்று இவ்வமைப்பு கூறினாலும் இதன் ரகசிய செயல்பாடுகள் - இது பொய் லட்சியம் - என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வமைப்பிற்கு தேவையான நிதிகளை ரோக்புலர் என்ற யூத அமைப்பும் ரோத் ஷீல்ட் என்ற யூத கோடீஸ்வரரின் வங்கியுமாகும்.

ஜிம்மி கார்டர், ரீகன், ஜோர்ஜ்புஷ், கிளிண்டன் போன்ற பலரும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டுதான் பின்னர் தேர்தலில் வெற்றிப் பெற்றனர். 1975ல் இவ்வமைப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மார்கட் தாட்சர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தின் பிரதமரானார். அரசியல் கணிப்பாளர்களின் கருத்துப்படி பிரதமராவதற்கு வாய்ப்பே இல்லாமலிருந்த டோனிபிளேயர் நாட்டை ஆண்டு வந்ததற்கு வழி வகுத்ததும் இந்த அமைப்புதான். காரணம் அவர் இந்த அமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொண்டுள்ளார்.
கடந்த எட்டு வருடங்களுக்கு முன் இவ்வமைப்பு கூட்டங்களில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பபைப் பெற்ற பத்திரிக்கையாளர்கள் சிலர் - தி நியு வேல்ட் ஆர்டர் இன்டலிஜன்ஸ் அப்டேட் - என்ற பெயரில் வெளியிட்ட அறிக்கையில்,
கொஸோவோ போர் முடிவுக்க&#