Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts

Feb 5, 2008

ஆஃப்கான் - பெண்கள்

பெண்களுக்கெதிரான பயங்கரம் ஆஃப்கானில் பரவுகின்றன.
முத்துப்பேட்டை, அபூ அப்ஃரின்.
அமெரிக்காவின் அட்டூழியமான படையெடுப்பு ஆக்கிரமிப்பால், ஆப்கானிஸ்தானின் தொன்மையான கலாச்சாரமானது கொஞ்ச கொஞ்சமாக மாறி மேலை நாட்டு ஆதிக்க சக்திகளால் அடிமையாகிக்கொண்டிருக்கிறது என்ற உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது என்பதானது, அங்கு நடந்து வரும் நிகழ்ச்சிகளை நாம் ஊடகத்துறைகள் மூலமாக நாள்தோறும் அறிகிறோம்.
திரைப்படம் பாவச்செயல் என்று கூறிக்கொண்டு இருந்த ஆப்கானிஸ்தான் நிலைமையானது, இன்று கலாச்சாரத்திற்கும் அனாச்சாரத்திற்கு அடிமைப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சினிமாக்கவர்ச்சி நட்சத்திரங்களின் வருகை என்று தற்போது நிலைமையே தலை கீழாக மாறி விட்டது. உலக அழகிகள் உலா வருவதும் இங்கிருந்து தான். நடக்க தெரிந்தும் முள்கள் குத்தியதைப்போல் ஒரு பிரம்மையையும், பணக்கார தோரணையில் ஒரு கஞ்சத்தனமான ஆடையுடனும், கேமரா பார்வைகளுக்கு பல நுணுங்களை கற்றுக்கொடுக்கும் பாவைகளாகவும், மற்றும் சளைக்காமல் பத்திரிகைகளில் இடம் பெறும் நொறுக்கு தீனியாகவும் ஆப்கானிஸ்தான் அழகிகள் ஆகி விட்டார்கள்.
சமீபத்தில் அங்கு நடைபெற்ற அழகிப்போட்டி ஒன்றில், அழகி ஒருத்தி அந்நாட்டு தேசியக்கொடி வடிவில் வடிவமைக்கப்பட்ட ஆடையினை உடுத்தி வலம் வந்து, பார்வையாளர்களுக்கு விருந்து கொடுத்தாள். அத்துடன் இங்குள்ள சிறார்கள், படிப்பதற்கு பள்ளிக்கூடம் செல்கிறார்களோ இல்லையோ ஆனால் தெருக்களில் ஆபாச போஸ்டர்களை, சினிமா நடிகைகளில் கவர்ச்சி படங்களையும் விற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதனை பத்திரிகை வாயிலாக நாம் கண்டோம்.
மேலாதிக்க நாட்டின் இசையானது அந்நாட்டு பெண்களை மிகவும் கவர்ந்துக்கொண்டு இருக்கிறது என்பதும் திண்ணமே. ஆம்.. இசையினை இந்நாட்டில் வளர்க்க வேண்டும் என்பதிற்காக வேண்டி மேலாதிக்க சக்திகள், பல டாலர் தொகையினை செலவு செய்கின்றன இங்கு எனலாம். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் இளம் பெண்களை குறிவைத்தே இத்தகைய திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இளமையில் கற்றால் மறக்க மாட்டார்கள் என்பதால் இது போல் பல சூழ்ச்சி மாயைகள்
'ஒரு விஷயத்தை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு ப்பொருளைப் பற்றியும் நன்கு அறிகிறவனாக இருக்கிறான்.'அல் குர்ஆன் 33 : 54
உஸ்பெஸ்கிதான் எல்லை மாகாணத்தில், மஸர்-இ-ஷரிப் நகரத்தில் நாகசாந்த் இசைப்பயிற்சி பள்ளியில், ஆறு மாத காலத்திட்டத்துடன் தொடங்கப்பட்ட பயிற்சி கூடத்தில் 18 பெண்கள் அடங்கிய குழுவானது இசையினை கற்றுக்கொடுக்கிறார்கள் பிறருக்கு. இங்கு, பெண்கள் எப்படி பாடுவது, மற்றும் இசைக்கருவிகளான கீ போர்டு, தபாலா எப்படி வாசிப்பது என்பதினை நுணுக்கமாக கற்றுக்கொடுக்கிறார்கள். அத்துடன் பழைய மற்றும் புதுமையான இசைக்கருவிகளை வாசிக்கவும் கற்றுக்கொடுக்கிறார்கள்.
இது போல் இசையாலும், பாட்டாலும் சிறு உள்ளங்களை கொள்ளை கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பல கோடி டாலர்களை ஆப்கானிஸ்தானில் தூவி விட்டு அவற்றில் குளிர் காய்கிறது ஆதிக்க சக்திகள். குறிப்பாக 2006 வருட வாக்கில், இந்நாட்டில் டாலர் 9,000 மதிப்பின் படி, ஆதிக்க சக்திகளின் கலை மற்றும் பண்பாடுகளை வளர்க்க வேண்டி செலவிட்டு இருந்தது அமெரிக்க சக்திகள்.
இது ஒரு சிறிய சாம்பிள் தான் இது போல் எத்தனையோ கோடிகளை கொடுத்தாவது பல வகைகளிலும் வளரும் நாடுகளையும் வளரும் இளைய சமுதாயத்தினை கெடுக்கவும் ஆதிக்க சக்திகள் முயற்சிகளை மேற் கொண்டு தான் இருக்கிறது.இங்கு படிக்கும் 14 வயதான ஜாக்ரா அம்ரி, கருத்தானது 'சிறு வயது முதல்கொண்டே எனக்கு இசையில் ஆர்வம் அதிகம், பெண்களும் இசைத்துறையில் சாதிக்கலாம், நானும் வருங்காலத்தில் ஒரு புகழ் பெற்ற இசைக்கலைஞானியாக வருவேன் என்று உறுதிப்பட கூறுகிறார். இங்கு படிக்கும் வயதில் குறைந்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய அக்கா 25 வயதான மாசோமா மாஸாரியும் இங்கு தான் இசைப்பயில்கிறார். மேலும் அம்ரி கூறுகையில், இசையானது ஒரு கெட்ட வழிக்குக்கொண்டு செல்லும் என்று சில பெற்றோர்கள் நினைத்துக்கொண்டு தங்களின் பிள்ளைகளை இசை பயில விடுவதில்லை என்கிறார் இவர். ஆகையால் தான் ஆப்கானிஸ்தானில் முன்பு இசைக்கும், பாடலுக்கும், நடனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவரின் பேச்சானது மேலாதிக்க சக்திகளுக்கு உறுதுணை புரிவது போல் தான் உள்ளது.
தாலிபான் அரசானது போனப்பின் தான் நாங்கள் இருண்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளோம் என்று இங்குள்ள சில பெண்களும் புதுமை விரும்பிகளும் சொல்கிறார்கள். ஆனால் இத்தகைய வெளிச்சங்கள் எல்லாம் இருள் தான் என்பது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை..? மறுமை வாழ்விற்கு செல்லக்கூடிய அந்த கார் இருளினை மறந்து விட்டார்களோ என்று என்ன தோன்றுகிறது. தலிபான் ஆட்சி இருக்கும் போது இத்தகைய கலாச்சாரம் கட்டுபாட்டில் இருந்தது எனலாம்.
அன்று,
பெண்கள் வெளியில் செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லமாட்டார்கள் மற்றும் புர்க்காவால் முகங்களையும் மற்றும் உள்ள பிற உடல் பகுதியினையும் கவனமாக மூடி மறைத்துக்கொள்வார்கள். ஆனால் மேற்கத்தைய கலாச்சாரம் இங்கு பரவி விட்டதால் புதுமையான ஆடையினை உடுத்திக்கொண்டு எந்தவிதமான துணையும் இல்லாமல் இங்குள்ள பெண்கள் வலம் வருகிறார்கள் தன்னந்தனியாக.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பெண்களில் எடுத்துக்கொண்டால் பாதி பேர்கள் பக்கத்து நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனலாம். மற்ற நாடுகளான ரஷ்யா, ஈராக் மற்றும் ஈரான் நாட்டினை சார்ந்த பெண்கள் இங்கு அதிகம் உள்ளார்கள். அவர்கள் தாங்களும் சுதந்திர வாழ்வினை விரும்புகிறோம் என்று சொல்லிக்கொண்டு அனாச்சாரம் என்ற சகதியில் வீழ்ந்து விட்டார்கள்.
ஆள் பாதி.. ஆடை பாதி என்பது பழமொழியாக இருந்தது. கலாச்சாரங்கள் மற்றும் அனாச்சாரங்கள் அதிகரித்து விட்டமையால், ஆடை கால் பாதி.. ஆள் முக்கால் பாதி.. என்ற புது மொழியானது ஆப்கானிஸ்தான் நாட்டில் மட்டுமல்ல இன்னும் பல நாடுகளிலும் பரவி விட்டது ஆதிக்க சக்தியால்..!..?
'நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய புதல்விகளுக்கும், விசுவாசிகளின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் (சுதந்திர மானவர்கள் என) அறியப்படுவதற்கு இது மிக நெருக்கமானதாகும், அப்போது அவர்கள் (பிறரால்) நோவினை செய்யப்படமாட்டார்கள். இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவானக, மிகக்கிருபையுடையவனாக இருக்கின்றான்.'அல் குர்ஆன் 33 : 59
பெண்களை ஏக இறைவன் பலஹீனத்திற்கு மேல் பலஹீனமாக தான் படைத்து உள்ளான். ஆனால் அந்த பலஹீனத்தை தம்முடைய பலமாக எண்ணிக்கொண்டு பல ஆதிக்க சக்திகள் பெண்களை எல்லாத்துறைகளிலும் புகுத்தி மகிழ்ச்சி அடைகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் நாட்டு இஸ்லாமிய பெண்களை வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், ஊடகத்துறையில் பணிபுரியக்கூடியவர்களாகவும் ஆக்கி உள்ளது. இவற்றில் பணி புரியும் இப்பெண்கள், அவர்களுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு உண்மையான செய்தியினை மறைத்து விடுகிறார்கள்.
இவர்கள் செய்யும் இந்த செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாத அந்நாட்டின் மார்க்க பற்றும் மற்றும் மதப்பற்றும் உள்ளவர்கள் அவர்களை, அவர்கள் பணி புரியும் இடத்திற்கு சென்று மிரட்டல் விடுகிறார்கள்.
அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் 'ஃபெமினென்சா' என்ற பெண்கள் இயக்கத்தின் துணை நிறுவனர் ஜோனா ஃபிரான்சிஸ் என்ற கிறிஸ்துவ சகோதரி ஒருவர் சமீபத்தில் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தினை, பிரபல இஸ்லாமிய மாத இதழ் (பார்க்க – விடியல் வெள்ளி ஜீன் 2007 இதழ் பக்கம் 8 மற்றும் 9) வெளியிட்டு இருந்தது.
'முஸ்லிம் பெண்களுக்கு ஒரு கிறிஸ்துவ சகோதரியின் எச்சரிக்கை' என்ற தலைப்பிட்டு அந்த கட்டுரை இருந்தது. அதனின் சாராம்சம் இதோ.
.அமெரிக்கர்களின் திரைப்படமும், இசையும் நடனமும் பாடலும் தீமைகளை தூண்டக்கூடிய வகையில் உள்ளது. முஸ்லிம் பெண்களை மனோ இச்சைகளுக்கு ஆட்படுத்த முயற்சிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இது போன்ற திரைப்படங்களில் நாங்கள் (அமெரிக்க பெண்கள்) விபச்சாரிகளைப் போல் உடை அணிவதையும் குடும்பத்தை விட்டு விலகி சந்தோஷமும் திருப்தியும் அடைவதாக சித்தரிக்கின்றனர். ஹாலிவுட் திரைப்படங்களில் நீங்கள் பார்க்கும் அனைத்தும் பொய் சித்தாந்தங்களும் நடைமுறைக்கு புறம்பான கலாச்சாரங்களும் தான். மேற்கத்திய ஆடைகள், ஒரு பெண்ணின் அழகு என்பதை அவளின் கவர்ச்சி மட்டும் தான் என்று உங்களை நம்பவைக்கின்றன.
ஆனால் இஸ்லாமிய பெண்களுடைய கலாச்சார ஆடைகளும் அவர்களுடைய பர்தாக்களும் மேற்கத்திய ஆடைகளைவிட அழகானவை. ஏனெனில், முஸ்லிம் பெண்களுடைய பாரம்பரிய ஆடைகள் அவர்களின் நம்பிக்கையையும் சுய மரியாதையையும் பாதுகாப்பதாக உள்ளது. சகோதரிகளே.. ஏமாந்து விடாதீர்கள்.. உங்களை நாசமாக்க அவர்களுக்கு (மேற்கத்தியர்களுக்கு) வாய்ப்பை கொடுக்காதீர்கள். உங்களின் கலாச்சாரத்ததை விடுத்து பிறவற்றில் மோகம் கொள்ளாதீர்கள் என்று அந்த சகோதரி, அந்த கடிதத்தில் மிகவும் உருக்கமாக எழுதி இருக்கிறார்.
இந்த எச்சரிக்கையானது, புதுமைகளை கண்டு புது யுகம் படைக்க இருக்கும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய சகோதரிகளுக்கு மட்டுமல்ல.. அனாச்சார சீரழிவால் நாள்தோறும் புதைந்துக்கொண்டு இருக்கும் பல நாட்டில் உள்ள நம்முடைய சகோதரிகள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக தான் அமையும் என்ற நம்பிக்கையுடன்..! வாழ்க்கை முன்னேற்றமும் மற்றும் ஆடம்பர வசதியும் தேவை தான் ஆனால் அதுவே வரம்பு மீறி போய்க்கொண்டு இருந்தால்..
வருங்காலங்கள் என்ன செய்ய போகிறது..? 1992 ம் வருடத்தில், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியான தாஸிகிஸ்தான் (Tajiskistan) பகுதியில் துவங்கப்பட்ட மக்கள் எதிர்ப்பு போரில் புதைக்கப்பட்ட பல வெடிப்பொருட்கள் தற்போது வெடித்து சிதறுகின்றன. சமீபத்தில் அந்த பகுதியினை சார்ந்த 'சலீம் ஷாய்முதிநாவ் (Salim Saimuddinov) என்ற சிறுவன் தன்னுடைய அண்ணனுடன் மலைப்பிரதேசத்திற்கு சென்று அடுப்பு எரிக்க விறகு எடுக்க சென்று இருக்கின்றான். (அங்கு துவங்கப்பட்ட போரால் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டு உள்ளது என்பது குறிப்படத்தக்கது). அங்கு அவனது காலடியில் பந்து போன்ற ஒன்று தட்டுப்பட்டு உள்ளது. அதனை அவன் விளையாட்டுக்காக உதைத்து இருக்கின்றான். தீடிரென்று வெடித்து அந்த சிறுவனின் கால் மற்றும் முகங்கள் பாதிக்கப்பட்டது. அதனை பற்றி அங்குள்ளவர்கள் குறிப்பிடுகையில் இந்த வகையான வெடிப்பொருட்கள் கிளாஸ்டர் பாம் (Cluster Bombs – ShOAB-0.5) என்று அழைக்கப்படுகிறது. இது பயங்கரமான சக்தி வாய்ந்தது என்றும் கூறுகிறார்கள். இது போல் இன்னும் பல வகையான வெடிப்பொருள்கள் இங்கு உள்ள மலைப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டு உள்ளன என்றும் அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.
அத்துடன் இத்தகைய வெடிப்பொருட்களானது, செசன்யா உகாண்டா கியூபா, சிரியா, உக்ரைன் போன்ற நாடுகளில் பயன் படுத்தப்படுகிறது. வருங்காலங்களில் இங்குள்ள சிறார்கள் எத்தகைய பாதிப்புகளை எதிர்க்கொள்ள போகிறார்களோ..!
தற்போது அமெரிக்காவால் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கும் ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல, இன்னும் பல நாடுகளில் உள்ள சின்னஞ்சிறு மலர்கள் பிறக்கும் போதே பல இன்னல்களுக்கு ஆளாகி தான் பிறக்கிறார்கள். மற்றும் அவர்கள் அனைவரும் ஏதொவொரு வகையில் ஊனமாக தான் பிறக்க செய்கிறார்கள். இவற்றிற்கு எல்லாம் காரணம் அந்த அந்த நாடுகளில் பயன்படுத்த படும் இது போல் உள்ள இராசயன வெடிப்பொருட்கள் தான் என்று தைரியமாக சொல்லலாம்.
தொட்டிலில் உறங்கும் குழந்தைகளின் நினைவுகள் இரத்தச்சுவடுகளோ..!..? தாமரை மலர் போன்ற கைகளை காணும் போது இரத்தக்கறை தான் மிஞ்சம் என்ற உணர்வுடன் பல(ர்) பிஞ்சுகள்.. பல நாடுகளில்..குழந்தையின் அழுகுரல்.. பசியா..!.. தூக்கமா..? பிறருக்கு தெரியாத பாஷைகள். தாய்க்கு மட்டும் தெரியும்.. ஆனால் கண் விழிக்கும் போது அந்த தாயினை பார்க்க முடிய வில்லை. பாசம் அறிந்த தாயினை துக்கமாக்கிய துரோகிகளால் கரைந்த கண்ணீர்த்துளிகள் ஏராளம்.
துப்பாக்கி துணையுடன் மொட்டுகளை சிறு பருவத்தில் பிய்த்தெறிய கல் நெஞ்சங்கொண்ட கயவர்களுக்கு என்ன துணிச்சல்..சிறு மலர்களை சிதைக்கும் போது மனித நேயம் மாய்ந்து தான் போய் விட்டது என்ற ஆச்சரியங்கள் ஒவ்வொரு நாளும்..?..!
ஏக இறைவன் இந்த உலகத்தினை மிகவும் அழகாக படைத்து இருக்கிறான். அதில் எத்தனையோ இயற்கையான வித்தைகள் இருக்கின்றன். ஆனால் அந்த வித்தைகளை அழிக்கக்கூடிய அளவில் தற்போது ஆதிக்கசக்திகளானது ஆப்கானிஸ்தான் நாட்டில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் மற்றும் இடங்களில் குண்டுகளை பொழிந்து அங்கு மாசுக்களை உண்டாக்கி வருகிறார்கள். இதனால் பல நாடுகளில் மாசுக்கள் அதிகமாக படிந்து வருகின்றன என்றால் மிகையாகாது. அந்தந்த நாடுகளில் உள்ள மாசுகட்டுப்பாடு அமைப்பானது பல போராட்டங்களையும் மற்றும் விழிப்புணர்வுகளையும் மக்களின் மத்தியில் செய்து வருகிறது.
வானங்களிலுள்ளவையும், இன்னும் பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். இன்னும், உங்களுடைய மனங்களிலுள்ளவற்றை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அவற்றை நீங்கள் மறைத்துக்கொண்டாலும் அதைப்பற்றி அல்லாஹ் உங்களை (விசாரணை செய்து) கணக்கு கேட்பான். ஆகவே, அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பு அளிப்பான். அவன் நாடியவர்களை வேதனை செய்வான். அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன். அல்குர்ஆன் 2: 284

Jun 8, 2007

திருக்குர்ஆனில் பெண்கள்

ஆண்கள் உலகில் பெண்கள் காலாகாலமாக பல கோணங்களில் பார்க்கப்படுகிறார்கள். விவாதிக்கப்படுகிறார்கள்.

பெண்களை மிக உயர்ந்த உன்னதப் படைப்பாக பார்த்து கவுரவிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை மிக மட்டரகமாக பார்த்து இழிவுபடுத்தும் ஆண்கள் மறுபுறம்.

பெண்களை தாய்மையுடன் பார்த்து மதிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை வெறும் பாலியல் இயந்திரமாக பார்த்து பழகிப் போன ஆண்கள் மறுபுறம்.

மனிதப் பிறவியில் பெண் தனித்தன்மை வாய்ந்தவள் என்று உணர்ந்து மதிப்பவர்கள் ஒரு புறம் என்றால், அவளுக்கு ஆத்மா என்று ஒன்று உண்டா என்று காராசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பவர்கள் மறுபுறம்.

இப்படியாக ஆண்களின் பார்வையிலும் சிந்தனையிலும் பெண் பல நிலைகளில் பரிணமிக்கிறாள்.

பெண்களை அடக்கி ஒடுக்கி வைத்திருந்த வரலாறு மிக நீண்டதாகும். 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளிலிருந்து பெண்கள் உரிமைப் பற்றிய பேச்சுகள் அடிப்பட்டு இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அது எல்லைக் கடந்துப் போய் கொண்டிருக்கின்றது.

பெண்களின் வாழ்வாதாரத் தேவைகள் மற்றும் அறிவாதாரத் தேவைகள் ஆகியவைத்தான் அவர்களுக்கான சரியான உரிமைகள் என்று ஆண்களில் ஒரு சாராரின் சிந்தனை வளர்ந்து அதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது, உலக அழகிப் போட்டியும் உடைக்குறைப்பும் ஊர் சுற்றலுமே பெண்களுக்குத் தேவையான உரிமைகள் என்று அதற்காக பணத்தை அள்ளிக் கொட்டி பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஆண்கள் கூட்டம் மறுபுறம்.

உண்மையில் பெண்களின் உரிமைகளை எப்படித் தீர்மானிப்பது என்பதில் பெண்களுக்கு மத்தியிலும் ஆண்களுக்கு மத்தியிலு்ம் பெரும் குழப்பம் நிலவி வருகின்றது என்றால் அதுதான் உண்மை.

பல்வேறு சாசன புத்தகங்கள், சட்ட புத்தகங்கள், அறிஞர் அவைகள் என்று அலசப்படும் இந்த விவாதத்தில் இதோ நாங்கள் குர்ஆனை முன் வைக்கிறோம். திருக்குர்ஆன் பெண்கள் பற்றி வரையறுத்துக் கொடுத்துள்ள அந்த சட்டங்களில் எது பெண்களுக்குக் கிடைக்க வேண்டுமோ அவ அனைத்தையும் நீங்கள் காணலாம்.திருக்குர்ஆன் வரையறுத்துக் கொடுத்துள்ள இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் பெண்ணுரிமை என்ற விவாதமே தேவையற்ற ஒன்றாகி விடும்.

இஸ்லாம் பார்க்கும் பெண் இதோ தொடருங்கள்.

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் உரிமைகள் உள்ளன பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (திருக்குர்ஆன் 2:228)

அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை. (திருக்குர்ஆன் 2:187)

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)

பொருள் திரட்டும் உரிமை
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. (திருக்குர்ஆன் 4:32)

கல்வி கற்றல், கற்பித்தல்
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். (திருக்குர்ஆன் 9:71)

சொத்துரிமை
குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. (திருக்குர்ஆன் 4:7)

உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு. நீங்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்பே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள். செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.) (இவை அனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் (செய்யப்பட வேண்டும்.) இது அல்லாஹ்வின் கட்டளை. அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (திருக்குர்ஆன் 4:12)

இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அனைவரும் பெண்களாகவும் (இரண்டு அல்லது) இரண்டுக்கு மேற்பட்டும் இருந்தால் (பெற்றோர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கு உண்டு. ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தால் அவளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதி உள்ளது. இறந்தவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு. இறந்தவருக்குச் சகோதரர்கள் இருந்தால் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பாகம் உண்டு. (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. உங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாகப் பயன் தருபவர் யார் என்பதை அறிய மாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:11)

பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான். இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன். (திருக்குர்ஆன் 4:176)

மணமகனைத் தேர்வு செய்யும் உரிமை
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (திருக்குர்ஆன் 4:19)

திருமணக் கொடை (மஹர்) பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குதல் கட்டாயம் பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)

கணவனுள்ள பெண்களும் (மண முடிக்க விலக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:24)

இன்றைய தினம் தூய்மையானவை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பு நெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தனது நம்பிக்கையை (இறை) மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (திருக்குர்ஆன் 5:5)

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தன் மகளுக்கு திருமண கொடைக் கேட்டுப் பெற்ற முஸ்லிம்.
எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர் என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன் 28:27)

மஹரை விட்டுத் தரும் உரிமை மனைவிக்கு உண்டு
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (திருக்குர்ஆன் 4:4)

மஹரைத் திரும்பக் கொடுக்கத் தேவை இல்லை ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா? (திருக்குர்ஆன் 4:20)

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (திருக்குர்ஆன் 4:21)

பெண்களுக்குக் கொடுத்த மஹரை எக்காரணம் கொண்டும் திரும்பக் கேட்க முடியாது.

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)

தாம்பத்தியம் இன்றி விவாகரத்துச் செய்தால் பாதி மஹர் அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:237)

மறுமணம் செய்யும் உரிமை
பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக் கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப் பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:232)

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 2:234)

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:235)

விவாகரத்துக்குப் பின் பொருளாதாரப் பாதுகாப்பு அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாகரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் தமக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை. (திருக்குர்ஆன் 2:236)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (திருக்குர்ஆன் 2:241)

உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்! அவர்கள் கர்ப்பிணிகளாக இருந்தால் அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவிடுங்கள்! உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அவர்களுக்குரிய கூலிகளை அவர்களுக்கு வழங்கி விடுங்கள்! உங்களுக்கிடையே நல்ல முறையில் (இது பற்றி) முடிவு செய்து கொள்ளுங்கள்! ஒருவருக்கொருவர் (இதைச்) சிரமமாகக் கருதினால் அவருக்காக இன்னொருத்தி பாலூட்டட்டும். வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்ப செலவிடட்டும். யாருக்கு செல்வம் அளவாகக் கொடுக்கப்பட்டதோ அவர் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து செலவிடட்டும். அல்லாஹ் எதைக் கொடுத்துள்ளானோ அதற்கு மேல் எவரையும் சிரமப்படுத்த மாட்டான். சிரமத்திற்குப் பின் வசதியை அல்லாஹ் ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:6, 7)

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு. (திருக்குர்ஆன் 2:233)

பிரியும் உரிமை
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:128)

இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம். மனைவியருக்கு நீங்கள் கொடுத்தவற்றிலிருந்து எந்த ஒன்றையும் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர. அவ்விருவரும் (சேர்ந்து வாழும் போது) அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் எதையேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவது இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அவற்றை மீறாதீர்கள்! அல்லாஹ்வின் வரம்புகளை மீறுவோரே அநீதி இழைத்தவர்கள். (திருக்குர்ஆன் 2:229)

ஆன்மீக ஈடுபாட்டில் ஆணும் பெண்ணும் சமம்.
உங்களில் ஆணோ, பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன் என்று அவர்களது இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான். உங்களில் சிலர் மற்றும் சிலரிடமிருந்து (தோன்றியவர்கள்.) (திருக்குர்ஆன் 3:195)

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (திருக்குர்ஆன் 4:124)

ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம். (திருக்குர்ஆன் 16:97)

யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 40:40)

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:32)

நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 9:72)

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை (முஹம்மதே!) நீர் காணும் நாள்! இன்றைய தினம் சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி. (திருக்குர்ஆன் 57:12)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (திருக்குர்ஆன் 33:35)

பாதுகாப்பு
ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சியத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள். (திருக்குர்ஆன் 24:4)

நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் அவர்கள் செய்யாததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூறையும், தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர். (திருக்குர்ஆன் 33:58)

நம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. (திருக்குர்ஆன் 24:23)

பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் தமக்குரிய காலக் கெடுவின் இறுதியை அடைவதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும் ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:231)

நபியே! (முஹம்மதே!) பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர். (திருக்குர்ஆன் 65:1)

மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:129)

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். (திருக்குர்ஆன் 65:2)

தங்களைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தமது மனைவியர் மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும். தான் பொய்யனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூற வேண்டும்) அவனே பொய்யன் என்று அல்லாஹ் வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) அப்பெண் சாட்சியமளிப்பது தண்டனை யிலிருந்து அவளைக் காக்கும் அவன் உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்). (திருக்குர்ஆன் 24:6, 7, 8, 9)

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான். (திருக்குர்ஆன் 4:19)

பண்பாடு
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 24:30)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அழகில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (திருக்குர்ஆன் 24:31)

நபியே! உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 33:59)

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). இவர்கள் கூறுவதை விட்டும் அவர்கள் சம்பந்தமில்லாதவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு. (திருக்குர்ஆன் 24:26)

திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப் பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 24:60)

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (திருக்குர்ஆன் 33:32)

உங்களில் தமது மனைவியரை கோபத்தில் தாய் எனக் கூறி விடுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய்களாக முடியாது. அவர்கள் வெறுக்கத்தக்க சொல்லையும் பொய்யையும் கூறுகின்றனர். அல்லாஹ் குற்றங்களை அலட்சியம் செய்பவன்; மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 58:2)

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (திருக்குர்ஆன் 24:27)

இஸ்லாம் வழங்கியுள்ள இந்த சட்டங்களில் எவரேனும் குறை இருப்பதாகக் கருதினால் அவர்கள் தங்கள் வாதத்தை எழுதலாம்.